|

லண்டன் தொலைக்காட்சி நிறுவனமான பி.பி.சி
(B.B.C – British
Broad casting Corporation) யானது சமீபத்தில்
உலகம் முழுவதும் ஆய்வு அறிக்கை ஒன்றினை மேற்கொண்டது.
ஈராக்கில், அமெரிக்க கூட்டுப்படைகள் ஈராக்கை விட்டு
வெளியேற வேண்டுமா..? அல்லது வேண்டாமா..? என்ற
கருத்தினை கேட்டு இருந்தது. இதில் உலகில் உள்ள
மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இதில் கலந்துக்கொண்டனர்.
பல பேரின் கருத்தானது இந்த ஆண்டுக்குள் அமெரிக்க
கூ(நா)ட்டு படைகள் வெளியேற வேண்டும் என்று கூறி
இருந்தனர். சில பேர்கள் பயந்துக்கொண்டு,
கருத்துக்கணிப்பில் எந்த விதமான பதிலையும் கூறவில்லை.
22 நாடுகளை சார்ந்த 23,000
மக்கள் இந்த கருத்துக்கணிப்பில் கலந்துக்கொண்டனர்.
இதில் 67 சதவீதமான மக்கள் அமெரிக்க கூட்டு படைகள் இந்த
ஆண்டுக்குள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்றும்,
49 சதவீதமான மக்கள் நிரந்தரமாக ஈராக்கை விட்டு
அமெரிக்க நாச படைகள் வெளியேற வேண்டும் என்றும்
சொன்னார்கள்.
அமெரிக்கா நாட்டிலும் இந்த கருத்துக்கணிப்பானது
நடைபெற்றது. அங்கு 61 சதவீதமான மக்கள் சொன்ன கருத்து
என்னவென்றால், இந்த வருடத்திற்குள் படைகள் அனைத்து
வாபஸ் பெற வேண்டும் என்றனர். 24 சதவீத மக்கள் உடனடியாக
படைகள் வெளியேற வேண்டும் என்றனர். 32 சதவீதமான மக்கள்
ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு
அமெரிக்க படைகள் ஈராக்கை விட்டு வெளியேறலாம் என்றனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இவ்வுலகம் இறை நம்பிக்கையாளனுக்குச் சிறைக்கூடமாகும்.
இறை நிராகரிப்பாளனுக்குச் சுவனமாகும்.'
அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) ஆதாரம்:
புகாரி,முஸ்லிம்,
ஜெர்மனி நாட்டில், 2006 ஆண்டில் 4,000
மக்கள் இஸ்லாம் மார்க்கத்தினை தழுவி உள்ளனர். 2005
ஆண்டில் 1,000 மக்கள்
இஸ்லாம் மீது பற்றுக்கொண்டு அதனை மனமுந்து
ஏற்றுக்கொண்டு உள்ளனர். இஸ்லாம்
அதற்கு முந்தைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடும்
என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
இந்த அறிக்கையினை ஜெர்மன் நாட்டைச் சார்ந்த அன்பு
சகோதரர். சலீம் அப்துல்லா அவர்கள் கூறி உள்ளார்கள்.
(Br.
Salim Abdulla - Director of the Islamic Archives
in the western town of
Soest).
தற்போது ஜெர்மனியில் 3.2 மில்லியன்
மக்கள் தொகையில் 18.000
பேர்கள் இஸ்லாத்தினை தழுவி உள்ளார்கள்.
பின்லாந்து நாட்டில் உள்ள ஹால்சிங்கி
(HELSINKI)
என்ற நகரில், முன்னாள் தீயணைப்புத்துறையை
சார்ந்தவர்களும் மற்றும் சில தொழிலாளர் துறையை
சார்ந்தவர்களும் சேர்ந்து அங்குள்ள அப்துல்லா தான்மி
(Abdullah Tanmi)
அவர்கள் தலைமையில் இஸ்லாமிய அடிப்படையில்
அமைந்த இயக்கம் ஒன்றினை அமைத்து உள்ளனர்.
கிறிஸ்துவர்கள் அதிகம் இருக்கும் பின்லாந்து நாட்டில்
தற்போது 55,000
இஸ்லாமியர்கள் உள்ளனர். இந்த இயக்கத்தின்
குறிக்கோள்கள் என்னவென்றால் பின்லாந்து நாட்டின்
கடைகளில் மதுபானங்களை விற்பதற்கு தடை விதிக்க வேண்டும்
மற்றும் சில பள்ளிக்கூடங்களில் மார்க்கத்திற்கு எதிராக
ஏதேனும் நடந்தால் பிள்ளைகளை அங்கு படிக்க பெற்றோர்கள்
அனுப்பக்கூடாது. பொது இடங்கள் மற்றும் இல்லங்களில்
நீச்சல் உடைகளை பிள்ளைகள் அணிவதற்கு பெற்றோர்கள்
அனுமதிக்கக்கூடாது. அடுத்த வருடம் பின்லாந்து நாட்டில்
நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில்
(Municipal Council
Election)
இந்த இயக்கம் போட்டியிடும். மற்றும் 2011 ம்
ஆண்டில் பொது தேர்தலிலும் இந்த இயக்கம் போட்டியிட்டு
மிகப்பெரும் அரசியல் கட்சியாக மாற உள்ளது. இன்ஷா
அல்லாஹ்..
துபாய் நாட்டின் துணை அரசரும் மற்றும்
பொருளாதாரத்துறை, தொழில் துறை அமைச்சருமான
H.H். ஷேக் ஹம்தன் பின்
ராஷித் அல் மக்தூம்; அவர்கள்
(H.H. Shaikh Hamdan bin Rashid Al Maktoum – Deputy
Minister of Dubai and UAE minister of
Finance
and Industry) கொடுத்த பொருள் உதவியால்,
ஜெர்மன் நாட்டில் உள்ள ஃபாராங்போர்ட்
(Frankfurt)
என்ற இடத்தில் கட்டப்பட்ட பள்ளி வாசலானது
7.9.2007 அன்று மாலை திறக்கப்பட்டது. இந்த பள்ளி
வாசலின் கட்டுமானப்பணியானது 2001 துவங்கப்பட்டது. இந்த
பள்ளி வாசலுக்கு, இஸ்லாத்தின் முதல் கலிபாவான அபூ
பக்கர் அல் சித்திக்
(The Mosque named after Abu Bakr Al Siddique, the
first
Caliph of Islam)
அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாஷா
அல்லாஹ்.. இந்த பள்ளி வாசல் திறப்பு விழாவின்
நிகழ்ச்சியில், அங்குள்ள முஸ்லிம் பிரமுகர்களும்,
தூதரக அதிகாரிகளும் மற்றும் உள்ள அமைச்சர்களும்
கலந்துக்கொண்டனர்.
துபாயில் உள்ள செம்பிறை சேவை இயக்கமானது
(Red Cresent
Society- RCS)பல தன்னார்வ தொண்டுகளை
உலகமெங்கும் செய்து வருகிறது. சமீபத்தில் சுனாமியால்
கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தோனிஷியா நாட்டில் உள்ள
ஃபாண்டா அஷிக்
(Banda
Aceh)
என்ற இடத்தில் 1,033
வீடுகளை திர்ஹம் 18 மில்லியன் செலவில் கட்டிக்கொடுத்து
உள்ளது. இந்த சேவை இயக்கத்திற்காக பல உதவிகளை ஐக்கிய
அமீரகத்தின் அரசரான ர்.ர் ஷேக் கலீபா பின் ஷையத் அல்
நைகியான் ((H.H
Shaikh Khalifa Bin Zayed Al Nahya)
அவர்கள் கொடுத்து உள்ளனர். ஆகையால் அவருடைய
பெயரினை அந்த இடத்திற்கு வைத்து உள்ளனர். அத்துடன்
ரமளான் மாதந்தோறும், நோன்பாளிகள் நோன்பு
திறக்கவேண்டும் என்பதற்காக வேண்டி பல ரமளான் குடில்களை
(Ramalan Tents)
துபாயின் பல மாகாணங்களில் ஆங்காங்கே அமைத்து
உள்ளனர். இந்த ரமளான் குடில்கள் நோன்பு காலங்களில்
மட்டும் செயல் படும். இதனால் பல தொழிலாளர்கள் அங்கு
மிக சிறப்பாக நோன்பினை திறக்கவும் மற்றும் பல
நண்பர்களுடன் பல நாட்டவர்களும் கலந்து உரையாடி
மகிழ்வுடன் மற்றும் சந்தோஷத்துடன் நோன்பு திறக்க வசதி
வாய்ப்பாக இது அமைகிறது. சகோதரத்துவம் நிறைந்த
மார்க்கம் என்பதினை இதிலிருந்தே நாம் கண் கூடாக
காணலாம்.
இது போல், அமெரிக்காவில் மக்களின் சேவையினை மட்டுமே
குறிக்கோளாக கொண்ட பல இஸ்லாமிய அமைப்புகள் ஆதிக்க
சக்தியால் பல வருடங்களாக நசுக்கப்பட்டு வருகின்றன.
இச்சேவை நிறுவனங்கள் அனைத்தும் தீவிரவாதிகளுக்கு
ஆதரவாக செயல் படுகின்றன என்ற ஒரு காரணத்தினை காட்டி
நசுக்கப்பட்டு விட்டன. அமெரிக்காவில் மிசோரி
மாகாணத்தில் செயல்பட்ட இஸ்லாம் - அமெரிக்க சேவை
இயக்கமும்
(Islamic – American
Relief
Agency) டெக்ஸாஸ் மாகாணத்தில் மிக பெரிய அளவில்
செயல்பட்ட புனித பூமி சேவை நிறுவனமும்
(Holy Land Foundation for Relief and
Development) மற்றும் மெக்ஸிகன் மாகாணத்தில்
செயல்பட்ட
Good Will Charitable
Organisation என்ற இயக்கமும் அமெரிக்காவில் தடை
செய்யப்பட்டு உள்ளன. ஆகையால் நோன்பு காலங்களில்
இங்குள்ள இஸ்லாமியர்கள்; தாங்களின் 'ஜகாத்' தொகையினை
யாரிடம் கொடுப்பது, எந்த விதமான முறையில் அதனை கொண்டு
கொடுப்பது, யார் யாருக்கு பகிர்ந்து கொடுப்பது, எப்படி
கொடுப்பது என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.
பல மேற்கத்திய நாட்டவர்கள் உண்மையான மார்க்கம் என்றும்
சத்திய மார்க்கம் என்றும் இது தான் நேர் வழியை
காட்டக்கூடிய மார்க்கம் என்றும் இஸ்லாத்தினை அவர்கள்
புரிந்துக்கொண்டனர். அல்லாஹீதலாவின் பெரும் உதவியால்
அதிகமானளவில் பல மக்கள் இஸ்லாத்தினை பற்றி அறிந்து
கொண்டு அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். அங்குள்ளவர்கள்
இண்டர்நெட் மூலமாக விளம்பரங்களை கொடுத்து யாராவது
எங்களுக்கு இஸ்லாத்தினை பற்றிய முழுவிவரங்களை
சொல்லிக்கொடுக்க தயாராக இருக்கிறீர்களா..? என்றும்
கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
:
'எல்லாக் குழந்தைகளும் இயற்கையமைப்பில்தான்
பிறக்கின்றன. பிறகு அவர்களது தாய் தந்தையர்கள் அவர்களை
யூதர்களாகவோ, கிறஸ்த்துவர்களாகவோ, நெருப்பi
வணங்குபவர்களாகவோ உருவாக்கி விடுகின்றனர். இது
எவ்வாறுள்ளதெனில், ஒரு கால்நடை நல்ல ஆரோக்கியமான
குட்டியைத்தானே ஈன்றெடுக்கின்றது, நீங்கள் அதில்
ஊனமுடையதைப் பார்க்கவா செய்கின்றீர்கள்? அல்லாஹ் எந்த
இயற்கையமைப்பில் மனிதர்களைப் படைத்துள்ளானோ அதே
இயற்கையமைப்பை மேற்கொள்ளுங்கள். அல்லாஹ் படைத்த
இயற்கையமைப்பில் எந்த மாற்றமும் இருந்திட முடியாது!
இதுவே முற்றிலும் மேலான செம்மையான மார்க்கமாகும்'
அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) ஆதாரம்:
புகாரி,முஸ்லிம்,
அமெரிக்க மட்டும் அந்த விஷயத்தில் கொஞ்சம்
விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஒரு பிடியாக
இருக்கிறது. என்ன செய்வது.. அல்லாஹ் நாடினால் மாற்றம்
நிச்சயமாக ஏற்படும் அங்கேயும். அமெரிக்க
நாட்டைச்சார்ந்த எல்லோரும் இஸ்லாத்தினை தழுவ கூடிய
காலம் வெகு விரைவில் வரும் அதனை நாம் காணத்தான்
போகிறோம். இன்ஷா அல்லாஹ்..நாம் இல்லையென்றாலும்
நம்முடைய சந்ததிகள் காணத்தான் போகிறார்கள்.
அமெரிக்க பல நாடுகளில் புரியாமல் மாட்டிக்கொண்டு
தற்போது என்ன செய்வது என்பது தெரியாமல் தவிக்கிறது. பல
நாடுகளில் அமெரிக்காவிற்கு ஏதிராக பல எதிர்ப்புகள்
வந்துக்கொண்டு இருக்கின்றன. 7.9.2007 அன்று
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஆசிய – பசிபிக்
பொருளாதார கருத்தரங்கானது
(Asia -
Pacific Economics Co-Operations (APEC)மூன்று
நாட்கள் நடை பெற்றது. அந்த கருத்தரங்கில்
கலந்துக்கொள்ள பல நாட்டினை சார்ந்த 21 தலைவர்கள்
கலந்துக்கொண்டனர். அந்த கருத்தரங்கத்தின் வளாகத்தின்
வெளியே போர் எதிர்ப்பு அணியினர் கைகளிலும் மற்றும்
முகத்திலும் சிவப்பு கலரில் உள்ள வர்ணங்களை
பூசிக்கொண்டு தாங்களின் எதிர்ப்பு குரல்களை
எழுப்பினார்கள் அங்குள்ள இளைய சமுதாயத்தினர்.
அமெரிக்காவின் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான
புநநெசயட.
General.
James Jones>
அவர்கள் சமீபத்தில், NBC
என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி
ஒன்றில், அமெரிக்கா தன்னுடைய ஈராக்கில் ஏற்பட்ட
தோல்வியினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதனுடைய அடுத்த
கட்ட நடவடிக்கையான வளைகுடாவின் ஒரு சில பகுதிகளை
தாங்கள் வசப்படுத்திக்கொள்ளலாம் என்ற அதனுடைய
முகத்திலும் தற்போது கரிப்பூசப்பட்டு வருகிறது.
ஆகையால் வளைகுடாவில் உள்ள நாடுகள் அனைத்தும்
ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் அமைதியான ஒரு
திருப்பம் மற்றும் மாற்றம் ஏற்படும் என்றும் அவர்
சொன்னார்.
அமெரிக்காவை சார்ந்த
Former Federal reserve Chairman
ALAN GREENSPANஅவர்கள் குறிப்பிடுகையில்,
அமெரிக்கா நாடானது தன்னுடைய தாகத்தினை தீர்க்க
எரிப்பொருள் வேண்டும் என்பதற்காக வேண்டி தான் ஈராக்கை
தேர்ந்தெடுத்துக்கொண்டது என்று தன்னுடைய கண்டனத்தினை
தெரிந்து உள்ளார்.
15.9.2007 சனிக்கிழமையன்று, அமெரிக்கா வெள்ளி மாளிகை
முன்பாக சுமார் 6,000
அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினார்கள்.
அந்த ஆர்ப்பாட்டமானது அமெரிக்காவிற்கு எதிரான போர்
எதிர்ப்பு குரலாக ஒலித்தது. இதில் 197 நபர்கள் காவல்
துறையால் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தில்
கலந்துக்கொண்டதில் பாதி பேர்கள் ஈராக்கிலிருந்து
திரும்பி சென்ற போர் படையினரும் மற்றும் அவர்களின்
குடும்ப உறுப்பினர்களும் மற்றும் அவர்களுடைய
நண்பர்களும் தான். போராட்டத்தினை கட்டுப்படுத்த
அங்குள்ள காவல் துறையினர் போராட்டத்தினை கலைக்க
அவர்களின் முகங்களில் மிளகாய் தூள் அடங்கிய பைப்பினை
கொண்டு அடித்தார்கள்.
2005 செப்டம்பர் மாதத்தில் டானிஷ்
(Danish)
நாடானது இறுதித்தூதரை பற்றிய சில பொய்யான
சித்திரங்களை வெளியிட்டு இருந்தது. அந்த சமயத்தில் பல
நாடுகளில் பல எதிர்ப்புகளை ஆதிக்க சக்திகள் சந்தித்தன
என்பதனை நாம் மறந்துவிட வில்லை. அப்போது உலகில் உள்ள
முஸ்லிம்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக போராட்டத்தில்
கலந்துகொண்டனர். இதனால் பல உயிர்களை பல உடமைகளை நாம்
பறிக்கொடுத்தோம். அப்போராட்டத்தில் வளைகுடா நாடுகளும்
கலந்துக்கொண்டன. ஆனால் சாலைப்போராட்டமாக அவர்கள்
செய்யாமல், டானிஷ் நாட்டின் தயாரிப்பு பொருட்களை தடை
செய்தனர் அந்த அந்த நாடுகளில். இதனால் டானிஷ்
நாட்டிற்கு பல கோடி டாலர் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டது.
அந்த நாட்டு பொருட்களை கடைகளில் இருந்தால் அதனை
குப்பைகளில் தூக்கி போட வேண்டும் என்றும் அப்படி
குப்பைகளில் போடாத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்
என்றும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது வளை
குடா நாடுகள். தற்காலிமாக அந்த பொருட்கள்
நிறுத்தப்பட்டன வளைகுடா நாடுகளில். ஆனால் அந்த சம்பவம்
நடந்து ஒரு சில மாதங்களில் மீண்டும் டானிஷ் நாட்டின்
தயாரிப்பு பொருட்கள் வளைகுடா நாடுகளில் உள்ள கடைகளில்
திரும்பவும் வந்து விட்டன. வளைகுடா வாழ் மக்கள் அதனை
மறந்து விட்டமையால் டானிஷ் தயாரிப்புகள் அதிகமான
அளவில் சந்தைக்கு வந்து விட்டன. மக்கள் அதனை விரும்பி
வாங்குகிறார்கள். அந்த நாட்டிற்கு தன்னுடைய ஆதரவினை,
அந்த நாட்டு பொருட்களை வாங்குவதால் அவர்கள்
காட்டுகிறார்கள்.
'விசுவாசங்கொண்டோரே..!
யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு)
நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,
(உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்களில சிலர்,
சிலருக்குப்பாதுகாவலர்களாக இருக்கின்றனர், உங்களில்
எவரேனும் அவாகளை(த் தனக்கு)ப் பாதுகாவலராக்கிக்
கொண்டால், அப்போது நிச்சயமாக அவரும் அவர்களில்
உள்ளவர்தாம், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார
சமூகத்தார்க்கு நேர் வழி காட்ட மாட்டான்'.
திருக்குர்ஆன் 5: 51
டென்மார்க் நாட்டை தொடர்ந்து, தற்போது சுவீடன் நாடும்
தன்னுடைய புத்தியை காட்ட ஆரம்பித்து விட்டன. சுவீடன்
நாட்டைச்சார்ந்த கார்டூனிஸ்ட்
Lars Vilks
என்பவர், வரைந்த முஹம்மது நபியின்
சித்திரப்படமானது சுவீடன் நாட்டிலிருந்து வெளிவரும்
Nerikes
Allehand
என்ற பத்திரிகையானது சென்ற மாதம் ஆகஸ்டு 18 ம்
தேதி அன்று வெளியிட்டு இருந்தது. தற்போது எகிப்து,
ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள மக்களிடம் பல
எதிர்ப்பினை கிளப்பி உள்ளது அந்த சம்பவம். சுவீடன்
நாட்டு பிரதம மந்திரியான
Fredrik Reinfeldt
என்பவருடன் அந்த நாட்டு இஸ்லாமிய இயக்கத்தினை
சார்ந்த 22 நபர்கள் இந்த சம்பவத்தினை பற்றி அவரிடம்
வலியுறுத்தி உள்ளார்கள். மேற்குறிப்பிட்ட
பத்திரிகையானது மன்னிப்பினை கேட்க வேண்டும் என்றும்
அவர்கள் குறிப்பிட்டார்கள். சமீபத்தில் அந்நாடு
மன்னிப்பு கேட்டு விட்டதாக ஊடகத்துறைகள் தெரிவித்து
விட்டன.
டென்மார்க் நாட்டினை போல் சுவீடனும் தற்போது இருக்கும்
பட்சத்தில் நாம் என்ன செய்ய போகிறோம். நாமே கேட்டு
கொள்வோம்..? விடைகள்.. அந்த நாட்டு பொருட்களை
முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இது போல் வேற
ஏதேனும் நாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக செயல் பட்டால்
நாம், நம்முடைய பணத்தின் ஒரு சல்லியினை கூட
அவர்களுக்காக கொடுக்க கூடாது. நாம் கொடுக்கும் ஒரு
சல்லி காசு கூட எந்த வழியிலும் அந்த நாட்டிற்கு
போகக்கூடாது. அந்த நாட்டு பொருட்களை வாங்கவே கூடாது.
அப்போது தான் நாம் நாமாக இருக்க முடியும்.
இல்லையென்றால் நம்மை அந்த ஆதிக்க சக்திகள் அடிமையாக்கி
வைத்து விடுவார்கள். இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாக
இருந்து ஆதிக்க சக்திகளுக்காக ஏதிராக நாம்
ஒவ்வொருவரும் போராடினால் நாமும் வெற்றியடையலாம்..
நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும்.
பிரிட்டன் ஈராக் நாட்டிலிருந்து வெளியேறும் போது
பாஸ்ரா நாட்டின் பழமையான அரண்மனை ஒன்றினை ஈராக்
மக்களிடம் ஒப்படைத்தது. பாஸ்ரா என்ற இடமானது
ஈராக்கிலிருந்து 550 கீ.மீ தூரத்தில்
தெற்குப்பகுதியில் அமைந்து உள்ள நகரமாகும். பிரிட்டன்
படைகள் பாஸ்ரா பகுதியிலிருந்து விரட்டு ஓடியதை கண்ட
ஈராக் நாட்டு இளைஞர்கள் 7.9.2007 அன்று அங்குள்ள
தெருக்களில் மகிழ்ச்சியுடன் அந்த வெற்றியினை
கொண்டாடினார்கள்.
'நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கே
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது, அவனே
உயிர்ப்பிக்கின்றான், (அவனே) மரணிக்கும்படியும்
செய்கின்றான், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த
பாதுகாவலரும் இல்லை, எந்த உதவியாளரும் இல்லை.'
திருக்குர்ஆன் 9 : 116
சென்ற வாரம்
Guardian News Agency
என்ற நிறுவனமானது, ஈராக் நாட்டினை பற்றி சில
அதிர்ச்சியான தகவல்களை தந்துள்ளது.
ஈராக் நாட்டில் இது வரை 1.2
மில்லியன் மக்கள் இறந்து போய் இருக்கிறார்கள்.
48 சதவீதமான மக்கள் துப்பாக்கி குண்டு வெடிப்பால்
இறந்து போய் விட்டனர்.
20 சதவீதமான மக்கள் கார் குண்டு வெடிப்பால் இறந்து
போய் விட்டனர்.
9 சதவீதமான மக்கள் வெடி குண்டு வெடித்து அதன் மூலமாக
காயம் ஏற்பட்டு இறந்து போய் விட்டனர்.
6 சதவீதமான மக்கள் அங்கு ஏற்பட்ட விபத்துக்களால் உயிர்
இழந்து விட்டனர்.
6 சதவீதமான மக்கள் தவிர்க்க முடியாத பல விபத்துக்களால்
இறப்பு ஏய்தனர்.
நன்றி: Khaleej Time
|