இறைவனுடைய வழிகாட்டுதல்களை
மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை
நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட
தீர்க்கதரிசிகள் பலரை ஏற்றுக்கொள்ளாதது
மட்டுமல்லாமல்லாமல், அவர்களை
துன்புறுத்தியும், அவர்களில் பலரை கொலை
செய்ததும், அதுமட்டுமல்லாமல் தாங்கள்
செய்த அந்த அநியாய - அநாகரீகச் செயல்களை
பிற்கால மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்பதற்காக அந்த தீர்க்கதரிசிகள் மீதே
கலங்கம் கற்பிக்கும் வகையில் அனைத்து
தீர்க்கதரிசிகளையும் ஏதாவது ஒரு வகையில்
அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இன்னும்
சொல்லப்போனால் ஒரு சாமானியன் கூட
செய்யத்துணியாத செயல்களை எல்லாம் அந்த
தீர்க்கதரிசிகள் செய்தார்கள் என்று
வரலாற்றைத் திரித்து எழுதியவர்கள் தான்
யூதர்கள். அந்த யூதர்களால் சிதைக்கப்பட்டு
தங்களுக்கு சாதகமாக கூட்டியும்,
குறைத்தும், திரித்தும் எழுதப்பட்ட
புத்தகங்களின் தொகுப்புகளைத்தான் 'பைபிள்'
என்றப் பெயரில், இறைவனிடம் இருந்து வந்த
புனித வேதமாக இன்றும் போற்றிவருகின்றனர்
யூதர்களும், கறிஸ்தவர்களும்.
இந்த வரலாற்றுத் திரிபுகளின் தொடர்ச்சி
தான் புதிய ஏற்பாட்டில் வரும் இயேசுவின்
வரலாறும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும்
சம்பவங்களும்.
இயேசுவைக் கொலைசெய்ய முயற்சித்ததற்கான
காரணங்களை பிற்கால மக்கள், யூதர்களை
குற்றம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக
அவரைப்பற்றி தரக்குரைவாகவும், இன்னும்
சொல்லப்போனால் அவர் தன்னை கடவுளின்
குமாரனாக காட்ட முயற்சித்தார் என்றும்
அவர் யூதர்களை கடுமையாக
திட்டித்தீர்த்தார் என்றும் இன்னும்
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி
வரலாற்றைத்திரித்ததோடு, அந்த இயேசுவை
உயர்வாக மதிக்கக்கூடிய மக்களை, 'இது தான்
உன்மையான இயேசுவின வரலாறு' என்று அவர்களை
நம்பவைத்து அதையே பின்பற்றவும் வைத்த
சூழ்சிக்காரர்கள் தான் இந்த யூதர்கள்.
(இது சம்பந்தமாக விரைவில் பல
ஆதாராங்களுடன் கூடிய ஆக்கங்கள் நமது
தளத்தில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்)
இவர்களின் இந்த அபாண்டமான
குற்றச்சாட்டுகளை மறுத்தும் - இவர்கள்
தங்கள் வேதங்களில் செய்த
தில்லுமுள்ளுகளையும், வரலாற்றுத்
திரிபுகளையும் மக்களுக்கு வெளிக்காட்டி,
சத்தியத்தை எடுத்துச்சொல்ல வந்தது தான்
திருக்குர்ஆன் என்னும் இறுதி இறைவேதம்.
இதையே அல்லாஹ் தன் திருமறையில் :
உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி
எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும்,
அசத்தியத்தையும் தெளிவாகப்)
பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன்
அடியார் மீது இறக்கியவன் மிக்க
பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் 25
: 1)
இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்)
தெளிவான விளக்கமாகவும்,
பயபக்தியுடையோருக்கு நேர்
வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும்
இருக்கின்றது. (அல்குர்ஆன் -
3:138)
தன் தாயை (மரியாளை) மதிக்காத
இயேசு :
இயேசு என்னும் ஈஸா (அலை) அவர்களின்
'நற்குணங்களில் ஒன்றை' திருக்குர்ஆன்
பின்வருமாறு பறைசாற்றுகிறது :
'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை
ஏவியிருக்கின்றான்). நற்பேறு
கெட்டபெருமைக்காரனாக என்னை அவன்
ஆக்கவில்லை. (குர்ஆன் -
19:32)
குர்ஆன் இந்த ஒரே வசனத்தில் இயேசுவின் இரு
நற்குணங்களை பறைசாட்டுகிறது.
1. தாயாருக்கு நன்றி செய்வார்.
2. கெட்ட பெருமைக்காரனாக இருக்கமாட்டார்
இவ்வாறு தனது தாயை மற்றவர்களைக்
காட்டிலும் அதிகம்
மதிக்கக்கூடியவராகத்தான் இயேசு
இருந்துள்ளார் என்பதை திருக்குர்ஆன்
உலகுக்கு எடுத்துரைக்கின்றது.
ஆனால் நான்கு நபர்களால் இயேசுவின்
வரலாற்றை எழுதியதாக சொல்லப்படும் பைபிலோ
அவர் தாயை மதிக்காதவர் மட்டுமல்லாமல்
திருக்குர்ஆன் எந்த இரண்டு குணங்கள்
அவரிடம் இருந்ததாக சொன்னதோ அந்த இரு
குணங்களும் அறவே இல்லாதவர் என்றே
நிரூபிக்க முற்படுகின்றது. இதை சகோதரார்
எம். எம். அக்பர் அவர்கள் சுருக்கமாக
எழுதியதற்கு மறுப்பாக, இயேசுவை
மதிக்கிறோம்(?) என்று தன்னைத் தானே
சொல்லிக்கொள்கிற 'உன்மையடியான்' என்பவர்
யூதர்களுக்கு ஆதராவாக எகிரி
குதிக்கின்றார். இயேசு நாதர் தன் தாயை
மதித்தார் என்று நிரூபிப்பதற்காக படாது
பாடு படுகிறார். இயேசு நாதர் அவர் தாயை
அவமதித்த சம்பவம் அந்த யோவான் 2:1-8ம்
வசனம் மட்டும் தான் வந்துள்ளது என்றால்
கூட நாம் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள
மாட்டோம். ஆனால் இயேசுவையும் அவர்
தாயையும் பற்றி பைபிளில் வரும் பல
வசனங்களில் அவர் ஒரு இடத்திலும் அவரை
மதித்ததாக தெரியவில்லை. இயேசுநாதர், தன்
தாயை மதிக்காதது மட்டுமல்லாமல் அவரை
பார்க்கும் நேரமெல்லாம்
உதாசீனப்படுத்தியும் - அந்தப்பரிசுத்தமான
தன் தாயை 'ஸ்திரியே'
அதாவது 'பெண்ணே' என்று
ஒரு மாற்றார் வீட்டு பெண்மனியை அழைப்பது
போல் தான்; அழைத்தார் என்று கூறுகிறது.
அவர் ஒரு இடத்தில் கூட மரியாளை 'தன் தாய்'
என்று கூறியதாக பைபிளில் கிடையாது.
பைபிளின் மத்தேயு 12 : 50 - 56 வரை வரும்
வசனங்களில் :
இப்படி அவர் ஜனங்களோடே
பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும்
அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே
நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை
நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய
சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே
நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில்
இப்படிச் சொன்னவனுக்கு அவர்
பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என்
சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய
கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி:
இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே
எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய்
இருக்கிறான் என்றார். - மத்தேயு
12 : 56 - 50
மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களில் இயேசுவை
அவரைப் பெற்றெடுத்த தாய் மரியால் பார்க்க
வேண்டும் என்று வேண்டுகோள்வைக்கின்றார்.
அதற்கு அவர் அளித்த பதிலுக்கும், தாயை
மதித்தலுக்கும் ஏதாவது சம்பந்தம்
இருக்கின்றதா? பொதுவாகவே ஒருவனுடைய தாய்
எப்படிப்பட்ட கெட்டகுணம் உடையவராக
இருக்கட்டும். எவ்வளவு மோசமானவராக கூட
இருக்கட்டும். அதற்காக தன்னை பல கஷ்டங்களை
அனுபவித்து பெற்றெடுத்த தாயுக்கு செய்யும்
நன்றி உபகாரம் இப்படித்தான் இருக்குமா?
இது தான் தாயை மதிக்கும் லட்சனமா? வெளியே
நின்றுக்கொண்டு பார்க்க வேண்டும் என்று
அனுமதிகேட்ட தாய்க்கு, இயேசு எவ்வளவு
பெரிய மனிதராக இருந்தாலும் இப்படி பதில்
அளிப்பது தான் மரியாதையா?
அதுவும் மரியாள் என்ற அந்த பரிசுத்த
பெண்மணி, ஏதோ உங்கள் தாய் என் தாய் போன்ற
சாதாரன பெண்மணியா? அவருடைய தியாகம் என்ன
சாதாரண தியாகமா? புரோகிதமும்,
மூடநம்பிக்கைகளும் புரையோடிப்போயிருந்த
அன்றைய காலத்தில் திருமணமே முடிக்காத ஒரு
கண்ணிப்பெண், இறைவனின் கட்டளைப்படி ஒரு
குழந்தையை பெற்றெடுத்து அதை சமூகம்
அங்கீகரிக்க என்ன பாடு பட்டிருப்பார்கள்?
எவ்வளவு துன்பங்களை
அனுபவித்திருப்பார்கள்? என்று யோசித்து
பாருங்கள். இந்த மரியாள் என்ற மரியம்
(அலை) அவர்களின் தியாகத்தைப்
பெருமைப்படுத்தும் விதமாக நபிகள்
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
'உலகிலேயே மிகச் சிறந்த இரண்டு
பெண்மணிகளில் ஒருவர் மரியம் (அலை) என்று
புகழ்ந்துரைத்தார்கள் (நூல் :
புஹாரி) அப்படிப்பட்ட அற்புதமான தாயை
-தியாகத்தின் மறுஉருவத்தை இயேசு
இப்படித்தான மதித்திருப்பாரோ?
அடுத்து பைபிளின் யோவான் 2 : 1-8 ல்:
மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள
கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது.
இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.
இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக்
கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின்
தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத்
திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு
'ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என்
வேளை இன்னும் வரவில்லை' என்றார். அவருடைய
தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு
என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள்
என்றாள். யூதர்கள் தங்களைச்
சுத்திகரிக்கும் முறைமையின்படியே,
ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர்
கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே
வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி:
ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்.
அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது
மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில்
கொண்டு போங்கள் என்றார். அவர்கள்
கொண்டுபோனார்கள்.
இந்த வசனத்திலும் இயேசுவிடம்
அவரது தாய் ஒரு வேண்டுகோள் வைக்கின்றார்.
அதற்கு அவர் பதிலாக 'செய்கிறேன்'
என்று சொல்லியிருந்தால் மரியாதை எணலாம்.
ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் பதிலென்ன?
'ஸ்த்ரியே' அதாவது
பெண்னே - 'உனக்கும் எனக்கும்
என்ன?' என்கிறார் என்றால் இதில்
எங்கே மரியாதை இருக்கின்றது? சகோதரர்
உன்மையடியான் 'ஸ்தியே'
என்ற வார்த்தைக்கு பக்கம் பக்கமாக விளக்க
அளித்தவர் அதற்கு அடுத்து வரக்கூடிய
வாசகத்தில் தியாகத்தின் மறுஉருவமான
பரிசுத்த மரியளை அதட்டும் விதமாக -
முகத்தில் அறைந்தார்போல்
'உனக்கும் எனக்கும் என்ன' என்று
பதில் அளித்துள்ளாரே, அது உங்கள்
கண்களுக்குத் தெரியவில்லையோ? அந்த
வார்த்தையை மட்டும் உங்கள் எழுத்துக்களில்
அப்படியே மறைத்துக்காட்டுவதன் நோக்கம்
என்ன?
//அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என்
வேளை இன்னும் வரவில்லை என்று
சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள்
கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை
எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே
கண்டுபிடியுங்கள்.//
//பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை,
நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும்,
எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு
தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட
விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு
தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில்
அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை.
இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என்
வேளை இன்னும் வரவில்லை என்று
சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20)
//
உன்மையடியான் தனது கட்டுரையில் இடையிலே
வரவேண்டிய அந்த 'உனக்கும்
எனக்கும் என்ன?' என்று இயேசு
திமிர்தனமாக பேசியதாக சொல்லப்படும் அந்த
வாத்தைகளை அழகாக நழுவிட்டுள்ளதற்கான
காரணம் என்ன? இவருடைய மனசாட்சிக்கே
உறுத்தியதால் தானே இந்த தந்திர வேலை இவர்
செய்துள்ளார்?
இப்படி 'உனக்கும் எனக்கும் என்ன'
என்று கூறி தன் தாயை ஊர் மக்கள்
கூடிஇருக்கின்ற திருமன சபையில், அங்கே
வந்துள்ள அத்தனைப் பேருக்கும் முன்பாக -
இப்படி எதிர்த்து பேசி மரியாளை அவமரியாதை
செய்தவர்தான் இயேசு என்கின்றனர் பைபிள்
எழுத்தாளர்கள். இது தான் தாயை மதித்தவர்
என்பதற்கான அடையாளமா? இப்படித்தான்
ஒவ்வொருவரும் தனது பெற்றோரை எல்லோருக்கும்
முன்பாகவும் அசிங்கப்படுத்தி மதிக்க
வேண்டும் (?) என்று இயேசு
கற்றுத்தருகிறாரா?
அது மட்டுமல்ல உண்மைஅடியான் 'ஸ்திரி'
என்பது ஒன்றும் மரியாதைக்குறைவான வார்த்தை
இல்லை என்று கூற முயற்ச்சிக்கின்றார்.
ஆனால் இதே இயேசு அதே 'ஸ்த்ரி'
என்ற வார்த்தையை பலருக்கும்
பயன்படுத்தியது போல் 'விபச்சாரி'
ஒருவருக்கும் பயன்படுத்துகிறார். (பார்க்க
யோவான் - 8 : 10) அந்த விபச்சாரிக்கு என்ன
வார்த்தையை பயன் படுத்தினாரே அதே 'ஸ்த்ரி'
என்ற வார்த்தையைத் தான் தனது பரிசுத்த
தாயுக்கும் பயன் படுத்தினார் என்பதையும்
இதன் மூலம் 'ஸ்த்ரி' என்றுக்கூறி மற்ற
பெண்களையள்ள தன் பரிசுத்த தாயை
அவமதித்ததாகத்தான் பைபிள் கூறுகின்றது.
இப்படி தன் தாயை எந்தவிதத்திலும்
மதிக்காதவராகவே பைபிளில் இயேசு
காட்டப்படுகிறார். யூதஎழுத்தாளர்கள்
இப்படித்தான் அவரைக் காட்ட
முயற்ச்சிக்கின்றனர். தன் தாயை மட்டுமல்ல
ஒட்டு மொத்த தாய் வர்க்கத்தையே
மதிக்கதவராகவும், கோபக்காரராகவும்,
பெருமைக்காரராகவும் தான் யூதர்களால்
எழுதப்பட்டு பைபிளில் இயேசுவைப் பற்றி
காட்டப்படுகிறது.
அடுத்தவன் பெற்றோர்களையும்
மதிக்காதவரா இயேசு?
பைபிளில் இயேசுவிடம் பரிசேயர்கள் ஒரு
அடையாளத்தை கேட்கின்றார்கள். அதை மத்தேயு
பின்வருமாறு சொல்கிறார் :
'இந்தப்
பொல்லாத
'விபசார சந்ததியார்' அடையாளம்
தேடுகிறார்கள் யோனா தீர்க்கதரிசியின்
அடையாளமேயன்றி வேறே அடையாளம்
இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று
சொல்லி, அவர்களை விட்டுப்
புறப்பட்டுப்போனார். மத்தேயு 16
: 3-4
இங்கே யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்கள்
இயேசுவிடம் அடையாளத்தை காட்டும் என்று
கூறுகிறார்கள். அதற்கு இயேசு அந்த
யூதர்களின் மேல் எரிச்சலடைந்து யூதர்களைத்
திட்டாமல் யூதர்களின் தாய்மார்களைத்
திட்டுகிறார். அதில் வரக்கூடிய வாசகம்
'விபச்சார சந்ததியர்'
இதை நம்ம தமிழ் பைபிள்
மொழிப்பெயர்பாளர்கள் கொஞ்சம் 'டீசன்டாக'
மொழிபெயர்த்துள்ளனர், தமிழ் மக்களை
ஏமாற்றுவதற்காக.
ஆனால் இயேசு திட்டியதாக சொல்லப்படும் அந்த
வார்த்தையின் நேரடி மொழிப்பெயர்ப்பு என்ன?
பொல்லாத விபச்சார சந்ததியினர் =
கெட்ட வேசிமக்கள் = கெட்ட வேசிபிள்ளைகள் =
கெட்ட வேசி சந்ததியினர் = கெட்ட தேவ்டியா
மக்கள் = கெட்ட தேவ்டியா பிள்ளைகள்
அதவாது 'இந்த கெட்ட வேசிமக்கள் -
தேவ்டியாமக்கள்' அடையாளத்தை தேடுகிறார்கள்
...'
இப்படிப்பட்ட கேவலமான - இன்றைய ரௌடிகளும்,
பொருக்கிகளும் உபயோகப்படுத்தும்
வாத்தைகளைத் தான் பரிசுத்த இயேசு
பயன்படுத்தினார் என்று சொல்கிறது பைபிள்.
இப்படித் திட்டுவது தான் பெற்றோர்களையும்
- தாய்மார்களையும் - அடுத்தவன்
குடும்பத்தினரையும் மதிக்கும் லட்சனமா?
அடுத்தவன் தாயை இப்படி விபச்சாரி என்றுத்
திட்டலாமா? தன்னிடம் வம்புக்கு வரும்
ஒருவனைப்பார்த்து 'நாயே'
'பேயே' என்றால் அவனை
மட்டும் திட்டுவதாக அமையும். அதற்கு
பதிலாக அவனது தாயை திட்டுவது எந்த
வித்தில் நியாயம்? அவன் தாய் என்ன
செய்தார்? இப்படித்திட்டினால் எவனுக்கு
கோபம் வராது?
உலகத்திலேயே ஒரு புனித வேதத்தில்
'பொள்ளாத விபச்சார சந்ததியினர்' - 'கெட்ட
தேவ்டியா மக்கள்' என்று ஒரு
பரிசுத்தர் கூறிய வார்த்தை வருகிதென்றால்
அந்த சிறப்பு பைபிளை மட்டுமே சாரும்.
இப்படிப்பட்ட அநாகரீக செயல்களைக் குறித்து
குர்ஆனின் படி இயேசுவின் வழியில் இறுதியாக
வந்த நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள்
உலகமக்களுக்கு கற்றுத்தரும் ஒழுக்கத்தைப்
பாருங்கள் :
'தன்னுடைய பெற்றோரைத் திட்டுவது
பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று
நபி(ஸல்) அவர்கள் கூறிய போது 'மனிதன்
தன்னுடைய பெற்றோரைத் திட்டுவானா?'' என்று
நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு ''ஆம்! ஒருவன் மற்றொருவனுடைய
தந்தையைத் திட்டுகிறான்;. அவன்(பதிலுக்கு)
இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். அதற்கு
அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி)
அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இது போண்ற ஒழுக்கத்தை
சொல்லக்கூடியவராகவும், அதை
செயல்படுத்தக்கூடியவராகவும் தான்
இயேசுவும் இருந்திருப்பார்கள் -
இருந்திருக்க வேண்டும். அதை
முஸ்லீம்களாகிய நாங்கள் உறுதியாக
நம்புகிறோம். குர்ஆன் அவரை நல்லோர்களில்
ஒருவர் என்று கூறுகிறது. ஆனால் பைபிளோ
அவரையும் அவரைப்போண்ற
தீர்க்கதிரிசிகளையும் மிக மிக மோசமானவர்
என்பது போல் காட்டுகிறது.
தந்தையின் மரணத்திற்கு
செல்லக்கூடாது என்று தடுத்த இயேசு:
அவருடைய சீஷர்களில் வேறொருவன்
அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய்,
என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு
கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு:
மரித்தோர் தங்கள் மரித்தோரை
அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி
வா என்றார். - மத்தேயு - 8
:21 - 22
ஒருவனுடைய தகப்பன் இறந்திருக்க, அவன் தன்
தகப்பனை இறுதியாகப் பார்த்து விட்டு அவரை
அடக்கம் பண்ணிவிட்டு வரவா? என்று
கேட்டதற்கு, அதை தடுக்கின்றார் என்றால்
இவர் எப்படிப்பட்ட அப்பட்டமான மனித உரிமை
மீறலை செய்திருக்கின்றார் என்று
புரிந்துக்கொள்ளுங்கள். சாதாரனமாகவே
ஒருவர் இறந்து விட்டால் மற்றவர் அதற்கு
உரிய அனைத்து உதவிகளும் செய்யவேண்டும்
என்பது சாதாரண சாமானியனும்
ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நியதி. ஆனால்
இந்த உலகத்திற்கே நல்வழிக்காட்ட வந்தவர்
தன் தகப்பனுடைய மரனத்திற்கு கூட செல்லாதே
என்று தடுக்கின்றார் என்றால், இயேசு
அவர்களை பைபிள் எவ்வளவு கீழ்தரமானவராக
சித்தரிக்கின்றது என்பதை
தெரிந்துக்கொள்ளலாம்.
இயேசு அவர்களை தாயை மதிக்கக்கூடியவராக,
தற்பெருமையற்றவராக, மிகுந்த ஒழுக்கசீலராக
காட்டுகிறது திருக்குர்ஆன். ஆனால் பைபிளோ
இவை அனைத்திற்கும் மாற்றமாக நடந்தவர்தான்
என்று கூறுகிறது. இதை கிறிஸ்தவ
சகோதரார்களும், மாற்று மத அன்பர்களும்
சற்று சிந்திக்க வேண்டும்.
ஏகத்துவம் வலைப்பூ
Name: abdul azeez
email: azeez1729@....
Location: abudhabi-habshan
Subject: General
Message:
அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த உண்மை அடியான்
என்பவர் நேரடி விவாதத்திற்கு அழைப்பு
விடுத்த இணையப்பேரவை தளத்தில் பார்க்கலாம்
அவர் நேரடி விவாதத்திற்கு தகுதி இல்லை
என்றும். அந்த அளவிற்கு பொது மக்களுக்கு
முன்னிலைஇளும் டிவி ஊடகங்கள் பார்க்கும்
விதத்தில். தனக்கு பேச திராணி இல்லை
என்றும்.சொன்னவர் தளத்தில் பேசலாம் என்று
சுட்டியும் அனுப்பியவர் தான் இயேசு தன்
தாயை மதித்துள்ளார்.என்று பக்கம் பக்கமாக
செய்தி எழுதிகொண்டிருக்கிறார்.ஏன்?
என்றால்.வார்த்தைகளை எழுதும் போது.சிலதை
மறைத்து அல்லது கூட்டி சேர்த்து தளத்தில்
மாறி மாறி அறிவிக்கலாம்.நேரடி விவாதத்தில்
அந்த மாயாஜாலத்தை காட்டமுடியாது. உண்மை
வெளிவந்து சந்தி சிரித்துபோகும்.என்ற பயம்
இருக்கவே செய்கிறது.அதனால் உண்மையான வேதம்
எங்களுடையது தான்.என்று சொல்கிறவர்கள் அதை
நிரூபிக்க வக்கில்லாமல் போய்டிச்சே அந்தோ
பாவம்.
மா சலாம்.
அப்துல் அசீஸ். |
|